அருளின் அற்புதங்கள் தொடர்
எழுதியவர்-
வேதாந்தகவியோகி நாகசுந்தரம்
பாகம் : 4
ஒருவர்
தன்னுடைய குடும்பம் நடத்துவதற்கு காரணமான வருமானமுடைய உத்தியோகத்தை விட்டுவிடுவாரா? இம்மாதிரி நிலை அப்பாவுக்கு
ஏற்பட்டது. சென்ற 1987 ம் ஆண்டு தான் சென் னையில் பார்த்து வந்த
வேலை மனத்திற்கு சரியில்லை என்று கண்டவுடன் அடுத்த நிமிடமே வேலையை ராஜிநாமா செய்து
விட்டார். நானும் காலேஜில் படிக்கிறேன். எனது தாயரும் வேலைக்கு செல்லாதவர். இந்த
மாதிரி சூழ்நிலையில் இவர்கள் வேலையை விட்டுவிட்டார். அதனையும் என் தாயார்
ஸந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். நாளையதினம் தானும் தன் குடும்பமும் எவ்வித
பற்றுக்கோடும் இல்லாமல் நடுவீதியில் நிற்கப்போகிறோமே என்ற கிலேசம் கொஞ்சங்கூட
அவருக்கு இல்லை. பரிபூர்ண சரணாகதி என்று
பெரியோர்களும் புராணங்களும் சொல்லுகிற நிலையை எனது அப்பாவும் அம்மாவும் இருவருமே
அடைந்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
தொடரும் அற்புதங்கள் :.......
No comments:
Post a Comment