Thursday 20 March 2014

அருளின் அற்புதங்கள் தொடர் 
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் : 7

சென்ற 1987 ல் சென்னை அயனாவரத்தில் எங்கள் குடும்பமும் எனது தாத்தா (தாயாரின் தந்தை) குடும்பமும் சேர்ந்து  வாழ்ந்து வந்தோம். அச்சமயம் எனது தாத்தாவுக்கு பீமரத சாந்தி செய்வதாகவும் அதற்கு சண்டி ஹோமம் செய்யலாமென்றும் முடிவானது. அதன்படி அப்பாதான் அதற்கு வேண்டிய ஸகல ஏற்பாடும், ஏன் பூஜா கல்பம் முதல்கொண்டு தயாரித்தார்கள். ஏனெனில்  அதற்குமுன் எனதுதாத்தாவும் சரி, அப்பாவும் சரி தனியாக தங்கள் சொந்த செலவில் - ஏற்பாட்டில் அதுவரை சண்டிஹோமம் செய்ததில்லை. இரண்டு நாட்கள் காரியக்ரமத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடானது. முதல்நாள் கடஸ்தா பனமும், பூஜையும், மறுநாள் காலை சண்டிஹோமமுமாக நடந்தது. அன்று மதியம் ஹோமம் பூஜைக்குப்பின் ஸமாராதனை நடந்தது. அதுசமயம்தான்  தேவியின் கருணாற்புதம் காணக்கிடைத்தது. அதாவது அப்பாவும் என் அம்மாவும் சாப்பாட்டுபந்தியை கவனித்தார்கள். முதல் இலையில் ஒரு பெண், (அவள் இவர்களுக்கு முன்பே தெரிந்த  வீட்டுவேலை செய்யும் பெண்தான்) கருமைநிறம்,  மணமானவள் சாப்பிடுவதை கண்டார்கள். அவளை அங்கு யாரும் உட்காரச் சொல்லியிருக்க நியாயமேயில்லை. ஏனென்றால் முதல் சாப்பாட்டுப்பந்தி ஹோமம் செய்த ரித்விக்குகளுக்கும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கும் என்பது ஒரு ஸம்ப்ரதாயமல்லாவா!  அந்த நிலையில் தூரத்தே நின்று பார்த்த இவர்களுக்கு அவள் ஒரு வேலைக்காரப் பெண்ணாகத் தெரியவில்லை. ஸாக்ஷாத் சண்டிகா பரமேச்வரியாகவே தான் தெரிந்தாள்.

                அப்பாவின்  பண்பட்ட உபாஸனை மற்றும் அவர் தன் குருவின்மீது கொண்டுள்ள அபரிமிதமான பக்தியினாலும்என் அம்மாவின் கருணா விலாஸத்தாலும்  (அம்மா அம்பாளின் அவதாரம் என்று அவளின் மறைவிற்குப்பின் வெளியான விஷயம்- இதுபற்றி புவனாவின்பரணி என்ற தலைப்பில் 2002ல் வெளியானது) (இப்போது நமது இணயதளத்தில் pdf வடிவில் உள்ளது.) அவர்கள் அம்பாளை ப்ரத்யக்ஷமாக கண்முன்னே கண்டிருக்கி றார்கள். இதனை அவர்கள் யாருக்கும் சொல்லவுமில்லை. பூஜை முடிந்து வீட்;டுக்கு வந்தபின்தான் அனைவரிடமும் சொன்னார்களாம்


பாகம் : 8

இதுவும் சண்டியாகம் பற்றியதே! அடுத்துவந்த 1990 ம்ஆண்டு அயனாவரத்தில் நாங்கள் தனியாக என் சொல்ப வருமானத்தில் வாழ்க்கை சக்கரம் உருண்டது. எங்கள் உபாஸனா வாழ்க்கையில் பிரதி பர்வாவிலும் எப்படியோ நவாவரணபூஜை கண்டிப்பாக உண்டு. அந்த ஆண்டு நவராத்திரி பூஜை வழக்கம்போல் ஏற்பாடாகி நடந்துவந்தது. நவமி அன்று சண்டி ஹோமம் நடக்கவேண்டும். நாங்கள் குடியிருந்த வீட்டில் மொட்டைமாடியில் எங்கள் முயற்சியில் படுதாகட்டி, அதனடியில் குண்டம் எல்லாம் தயாராகிவிட்டது. கீழே குடியிருக்கும் பகுதியிலும் ஹோமகுண்டம் அமைக்க இடமில்லை. அதுவோ மற்றவர் வீடு. நாங்கள் வாடகை க்கு குடியிருக்கிறோம். மாலை 4 மணிக்கு சண்டி ஹோமம் செய்வதாக எண்ணம். மதியம் 12 மணிக்குள்ளாகவே எல்லா சாமான்களும், நைவேத்யம் உள்பட அனைத்தும் தயாராகிவிட்டது. ஆனால் சுமார் 2 மணிக்கு வானம் இருண்டு கொண்டு மழைக்கான அறிகுறி ஆரம்பமாகிவிட்டது. எங்களுக்கு மிகுந்த பயமாகிவிட்டது. ஆனால் அப்பாவும் அம்மாவும் இதுபற்றிய கவலை எதுவும்  இல்லாதவர்களாவே தோன்றியது. நான் மொட்டை மாடியில்; சென்று அமர்ந்து ஜபம் செய்துகொண்டிருந்தேன். மழை எந்த நிமிடமும் கொட்டி தீர்க்க தயாராக இருந்தது. இன்னிலையில் மாலை மணி 4 ஆகிவிட்டது. சாமான்கள் பூராவும் மாடியில் கொண்டு வைத்து ஹோமத்துக்கான ஏற்பாடுகள் தயாராகி தொடர்ந்து ஹோமமும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு பூர்ணாஹூதி நடபெற்று பூர்த்தியானது. பின்பு மழையே வரவில்லை. மறுநாள் அதிகாலை  3 மணிக்கு மேல் நவமியில் வாஞ்சாகல்பலதா என்கிற ஹோமமும் தொடங்கி 6 மணிக்கு பூர்த்தியானது. பூர்த்தியான அடுத்த விநாடி வானம் இருண்டது. மழை 'சோ' என கொட்டத் தொடங்கிவிட்டது. பார்த்தீர்களா! குருக்ருபைக்கும் தீர்மானமான எண்ணத்திற்கும் பஞ்ச பூதங்களே துணை செய்கின்றன என்பதை என் சிறுவயதிலேயே தெரிந்து கொண்டேன்.


தொடரும் அற்புதங்கள் :.......
அருளின் அற்புதங்கள் தொடர் 
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் :5


சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பா அவர்கள் வழக்கம் போல் தான் எழுதும் அருள்வாக்குகளுக்கு மத்தியில் ராஸலீலையும் ஆத்மானந்தமும் என்ற தலைப்பில் ஒன்று எழுதினார்கள் . அதில் ஸ்ரீமத்பாகவத புராணத்தில் கண்ணனின் தலையான லீலையான ராஸலீலையே நாம் நமது ஸ்ரீவித்யா ஸபர்யையில் செய்யும் ஆச்சர்யாஷ்டோத்தர சதநாமாவளியின் தத்துவார்த்தம் என்று ஸித்தாந்தமும் செய்துள்ளார்கள். மேலும் இந்த ராஸக்ரீடையின்  தத்துவம் தான்  ஸன்யாஸயோகம்  என்று எழுதியுள்ளார்கள். நான் அதனை படிக்கும் காலத்தில் இந்த இடத்தில் எனக்கு சற்று ஸந்தேஹம் இருந்தது. ஆனால் அதனை அப்பாவிடத்தில் இதுபற்றி கேட்டவனில்லை. ஏனெனில் அவருளால் இதற்கு நமக்கு விளக்கம் அவரே ஒருநாள் கொடுப்பார் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் பாருங்கள் அடுத்த சில தினங்களில் தொலைக்காட்சியில் குரவைகூத்து என்ற தலைப்பில் ராஸலீலை பற்றி பேசின ஒருவர் கூறினார்:  ஸ்ரீமத்பாகவதத்திலுள்ள ராஸபஞ்சாத்யாயீ என்கிற 5 அத்தியாயங்கள் கோபிகைகளுடன் கண்ணன் நிகழ்த்தின அதிஅத்புதமான வைபவங்கள். நாராயணபட்டத்திரி அவர்களும் தன் நாராயணீயத்தில் இதுபற்றி 5 ஸ்லோகங்கள் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதன் ஸன்யாஸம் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாகவத பாகத்தை அவசியம்  படிப்பார்கள் என்ற கூறினார். இப்போது முன் எனக்கிருந்த ஸந்தேஹம் இதனால் சற்று நீங்கிற்று. ஆனால் நான் இங்கு சொல்ல வந்தது - நமது குருநாதரின் தீர்க்கமான புராணஞானம் பற்றித்தான். அவர் தான் அருள்வாக்குகள் எழுதும் நேரத்தில் அதற்கு ஆதாரமாக அச்சமயம் எந்த  நூலையும் அருகில் வைத்துக் கொண்டதில்லை. பலமுறை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்கள், நான் எழுதிவருவேன். அப்போதும் அவரின் கையில் எந்தஆதாரமும் இருக்காது. ஆனால் சில சமயம் தான் சொல்லும் விஷயத்துக்கு சம்பந்தமில்லா புத்தகம் அவர்கள் கையில் இருக்கும். அவர் எப்போதோ சொன்னது இப்பால் தொலைக்காட்சியில் குரவைகூத்து என்ற தலைப்பில் ஒருவர் அதனை உறுதி செய்கிறார் என்பதைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.


பாகம் : 6


இதன் தொடர்ச்சியாக வேறு ஒரு செய்தியையும் கூறவேண்டியுள்ளது.  இது அப்பாவே என்னிடமும் மற்றம் சில சீடர்களிடமும் சொன்ன விஷயம் தான். 1975 ம் ஆண்டில் தன் குருநாதரிடத்தில் ஸ்ரீசியாமளா தண்டகம் என்ற காளிதாஸனின் ஸ்லோகங்களுக்கு  தான் எழுதியதாக ஒரு விளக்கவுரையை காட்டியுள்ளார்கள். அதனை அவர் படிக்கும் படி சொல்லியுள்ளார். இவர்கள் படிக்கத்தொடங்கி முதலில் கடவுள் வணக்கமாக தான் எழுதிய ஒரு ஸ்லோகத்தை படித்தாராம். அது-
                சாந்தம் சிவமத்வைதம் சதுர்த்தம்
                மன்யந்தே ஸ ஆத்மா விக்ஞேய:
இதனை பரமகுருநாதர் செவி மடுத்தவுடன் -
நிறுத்து, நிறுத்து, இது எங்கே உள்ளது? எதனைப் பார்த்து எழுதினாய்?
என்ற கேட்டாராம்.
அதற்கு-
தான் எந்த ஆதாரபுத்தகமும் என்னிடம் இல்லை. ஏதோ தோன்றினது எழுதினேன்
-என்றாராம். அதற்குமேல் அவர்கள் எதுவும் சொல்லாமல் சிறிதுநேரம் மௌனமாக இருந்துவிட்டு பின் சொன்னார்களாம்.
இது மாண்டூக்ய உபநிஷதத்தில் உள்ள வாக்கியம். உனக்கு எப்படி தெரிந்தது
என்று கேட்டாராம்.
தான் எந்த உபநிஷதமும் படித்தவனில்லை என்றும் அவ்வாறு ஒரு உபநிஷதம் உள்ளது என்பதே தாங்கள் இப்போது கூறியபின்தான் எனக்குத் தெரியும் .
-என்றும் சொன்னாராம்.
நீ முன் ஜன்மத்தில் இதனை படித்திருக்கிறாய். அதுதான் இப்போது ஞாபகத்துக்கு வந்துள்ளது.
-என்று விளக்கம் சொன்னார்களாம்.
எனவே நான் முன்பு ராஸலீலை பற்றி சொன்ன விஷயம் இதன் அடிப்படையில் தான் நேர்ந்திருக்கிறது என்று தான் முடிவுக்கு வருகிறோம்.


தொடரும் அற்புதங்கள் :.......

Tuesday 18 March 2014

அருளின் அற்புதங்கள் தொடர் 
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் : 4


ஒருவர் தன்னுடைய குடும்பம் நடத்துவதற்கு காரணமான வருமானமுடைய உத்தியோகத்தை விட்டுவிடுவாரா?  இம்மாதிரி நிலை அப்பாவுக்கு ஏற்பட்டது. சென்ற 1987 ம் ஆண்டு தான் சென் னையில் பார்த்து வந்த வேலை மனத்திற்கு சரியில்லை என்று கண்டவுடன் அடுத்த நிமிடமே வேலையை ராஜிநாமா செய்து விட்டார். நானும் காலேஜில் படிக்கிறேன். எனது தாயரும் வேலைக்கு செல்லாதவர். இந்த மாதிரி சூழ்நிலையில் இவர்கள் வேலையை விட்டுவிட்டார். அதனையும் என் தாயார் ஸந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். நாளையதினம் தானும் தன் குடும்பமும் எவ்வித பற்றுக்கோடும் இல்லாமல் நடுவீதியில் நிற்கப்போகிறோமே என்ற கிலேசம் கொஞ்சங்கூட அவருக்கு  இல்லை. பரிபூர்ண சரணாகதி என்று பெரியோர்களும் புராணங்களும் சொல்லுகிற நிலையை எனது அப்பாவும் அம்மாவும் இருவருமே அடைந்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தொடரும் அற்புதங்கள் :.......
அருளின் அற்புதங்கள் தொடர் 
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் : 2

சென்ற சில ஆண்டுளுக்கு முன் கேள்விப்பட்ட ஒரு செய்தி இது. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் உள்ள அப்பாவின்  சிஷ்யை ஒருவள் சாமான்கள் வாங்கிக்கொண்டு  தன் பெண்ணுடன் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அந்நேரம் அவளது ஸகோதரர் ஒருவரிடமிருந்து  (அவரும் இவரின் சீடர்) மொபையில் போன் கால் அழைத்தது. சாதாரணமாக ஸெளக்கியம் விசாரித்து விட்டு போன் நின்று விட்டது. உடனே இவளுக்கு மறுநாள் தீபாவளி யாயிற்றே! நமது குருநாதருக்கு பிறந்த நாள் அல்லவா! இதனை தன் ஸகோதரனுக்கு நினைவு படுத்தியிருக்கலாமே என எண்ணினாள். இந்த எண்ணம் தோன்றி மறைந்த அடுத்த விநாடியே ஆட்டோ எதிரில் மரத்தில் மோதி ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்துவிட்டது. இவளும் இவளின் பெண்ணும் கீழே உருண்டார்கள். ஆனால் அதியசம் பாருங்கள். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆட்டோ டிரைவருக்கு மட்டும் சிறிய காயம். உடன் அவளுக்கு தன் குருநாதர் நினைவுதான் வந்தது. ஏன் தெரியுமா? அவரின் நினைவை மனதில் கொண்டிருந்த நேரத்தில்தானே இந்த விபத்து நேர்ந்தது. அதனால் குரு நினைவே எந்த ஆபத்தையும் நீக்கும் என்பதை நிதரிசனமாக உணர்ந்தாளாம். 

பாகம் : 3


 அப்பா  தொடர்பும் பக்தியும் வைத்திருந்த ஸித்தமஹான் ஸ்ரீகாரைசித்தர் 1964 ஆகஸ்டு 24 ல் கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் மதுக்கரையில் ஸித்தி யடைந்தார்கள். அவர்களின் அஸ்தியை அவர் ஸித்திகள் புரிந்துவந்த சாந்தவெளி ஸ்ரீஆஞ்ஜனேயர் ஸந்நிதிக்கு பின்புறம் ஸ்தாபித்து ஒரு மண்டபமும், அதில் அவரின் திருவுருவச்சிலையையும் பக்தர்கள் உண்டாக்கினார்கள். அதன்பின் அப்பாவின் மனதிலும், வாழ்க்கையிலும் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அப்போது அப்பாவுக்கு ஸ்ரீவித்யா பற்றி எதுவும் தெரியாது. அதாவது திடீரென அவர் நினைவிழந்து விடுவார்களாம். அச்சமயம் அவரது வாய் முணுமுணுக்கத் தொடங்கும். அவர் சொல்வதை என் பெரியப்பா அப்படியே எழுதிவைத்து விடுவார்களாம். அந்த விஷயங்கள் அத்தனையும் வேதாந்த பரமாகவும், மந்த்ர சாஸ்த்ர பரமாகவும், சில புராண கதைகள் பற்றியதாகவும் இருந்துவந்தன. அந்நாட்களில் அப்பாவிடம் அவரரியாமலேயே சில ஸித்திகள் கைகூடி யிருந்தனவாம். இதனை என் பெரியப்பா என்னிடம் கூறியுள்ளார்கள். தான் உணவு உண்ணும்போது பல சமயம் உணவு வகைகளை அதாவது காய், கூட்டு, சாம்பார், சாதம் அத்தனையையும் ஒன்றாக பிசைந்து சாப்பிடுவாராம். தனக்குதானே நினைவில் ஆழ்ந்து த்யானஸமாதியில் இருப்பாராம். அத்துடன் நில்லாமல் இந்த அருள்வேளை நேரத்தில் பலவிதமான பூஜா விவரங்களை கூறி அந்த ஊரில் உள்ள திருக்கோயில் அம்பாள் ஸ்ரீநித்ய கல்யாணசுந்தரிக்கு ஒரு நவசக்தி அர்ச்சனை செய்யப்பணித்திருக்கிறார். அதுவும் மிகச்சிறப்பாக பலருடைய உதவியினால் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் தன் எதிரில் உள்ள மனிதர்களின் மனதில் நினைக்கும் விஷயங்களை கூறி அசத்துவார்களாம். இதனால் இவரின் எதிரில் வருவ தற்குக்கூட மற்றவர்கள் அச்சப்படும் நிலை உருவானது. இதனை அப்பாவே தன்னளவில் உணர்ந்து ஒரு நாள் அம்பாள் ஸந்நிதியில் தனக்கு அத்தகைய ஸித்தி கைவரக்கூடாது எனவும், அத்தகைய ஸித்தி என்னிடம் உள்ளது என தானே உணரக்கூடாது எனவும் மிகவும் மனவருத்தத்துடன் கதறி வேண்டியிருக்கிறார். இதற்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்களின் அருள்வாக்குகளை படித்து வந்ததே காரணம் என்று கூறுவார்கள். அதன் பின் சில மாதங்களிலேயே அவர் தன் குருநாதரை சந்திக்கும் படி திருவருள் கூட்டியிருக்கிறது. அவரிடம் இத்தகைய ஸித்தி தனக்கு உள்ளது எனக் கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் அதனை நீ மறந்து விடு என அறிவுரை சொன்னார்களாம். இதன்னியில் அப்போதெல்லாம் அப்பாவுக்கு தன் இடது கையிலிருந்து திடீரென குங்குமம் அல்லது சந்தனப்பொடி கிடைக்கும். இதுபோல் பலமுறை பலநாட்கள் முன்பு நடைபெற்று வந்துள்ளது. பிறகு தன் குருநாதரை சந்தித்தபின்பு அவரின் அறிவுரையும் அனுக்கிறஹமும் அவரிடமிருந்து அத்தகைய சக்தி நாளடைவில் குறையத் தொடங்கிற்றாம். எங்களுக்குத்தெரிந்து இந்நாட்களில் பலமுறை கூட அத்தகைய சந்தனப்ரஸாதம் பெற்றிருக்கிறோம். இது எல்லாமே அவர்களின் எண்ணப்படி ஸித்தரின் தொடர்பே இத்தகைய சக்தியும் ஸித்தியும் தனக்கு வருவதற்கு காரணம் என்று சொல்லியிருக்கிறார்.
contd........ 

Tuesday 18 February 2014

கணினியின் தத்வம்

பல ஆண்டுகளுக்குமுன் கணினியின் பயன்பாட்டில் தோன்றிய தத்வங்கள். எழுதியது: நாக.சுந்தரம்

CABINET
உடல்
CPU
மூளை
MONITOR
முகம்
KEYBOARD
கைகள்
MOUSE
மனம்
WEB CAMERA
கண்கள்
OPERATING SYSTEM (OS)
பிறவி
SOFTWARE
வாஸனைகள் (வினைகள்)
INSTALLATION OF SOFTWARE
புதிய வாஸனைகள்
MEMORY
ஞாபக சக்தி
FORMAT/INSTALL
இறப்பு/பிறப்பு
INTERNET
விஷய பரிவர்த்தனைகள்
WEBSITE
உறவுகள்
SCANNING
புலன்களால் ஏற்படும் விஷயப்பதிவுகள்
PRINTER
எழுத்துக்கள்
SPEAKERS
பேச்சு
MIC
வாய்
SHUTDOWN
உறக்கம்
RESTART
கண்விழித்தல்
UPGRADATION
நற்பிறவி
UPDATES
வயதுஏறுதல்
VIRUS
தீயசிந்தனைகள்
ANTI-VIRUS SOFTWARE
தீக்ஷை
FOLDER
புத்தி
FILE NAME
அஹங்காரம்
HARD DISK
நினைவுகள்பதியும்இடம் (சித்தம்)


Thursday 6 February 2014

அருளின் அற்புதங்கள்
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் : 2


சென்ற சில ஆண்டுளுக்கு முன் கேள்விப்பட்ட ஒரு செய்தி இது. தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் உள்ள ஸ்ரீஅப்பாவின்  சிஷ்யை ஒருவள் சாமான்கள் வாங்கிக்கொண்டு  தன் பெண்ணுடன் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அந்நேரம் அவளது ஸகோதரர் ஒருவரிடமிருந்து  (அவரும் இவரின் சீடர்) மொபையில் போன் கால் அழைத்தது. சாதாரணமாக ஸெளக்கியம் விசாரித்து விட்டு போன் நின்று விட்டது. உடனே இவளுக்கு மறுநாள் தீபாவளி யாயிற்றே! நமது குருநாதருக்கு பிறந்த நாள் அல்லவா! இதனை தன் ஸகோதரனுக்கு நினைவு படுத்தியிருக்கலாமே என எண்ணினாள். இந்த எண்ணம் தோன்றி மறைந்த அடுத்த விநாடியே ஆட்டோ எதிரில் மரத்தில் மோதி ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்துவிட்டது. இவளும் இவளின் பெண்ணும் கீழே உருண்டார்கள். ஆனால் அதியசம் பாருங்கள். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆட்டோ டிரைவருக்கு மட்டும் சிறிய காயம். உடன் அவளுக்கு தன் குருநாதர் நினைவுதான் வந்தது. ஏன் தெரியுமா? அவரின் நினைவை மனதில் கொண்டிருந்த நேரத்தில்தானே இந்த விபத்து நேர்ந்தது. அதனால் ஸ்ரீகுருவின் நினைவே எந்த ஆபத்தையும் நீக்கும் என்பதை நிதரிசனமாக உணர்ந்தாளாம்.

தொடரும்  அற்புதங்கள் .......... 

அருளின் அற்புதங்கள் - எழுதியவர்- நாகசுந்தரம்

அருளின் அற்புதங்கள்
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
               
                உலகில் ஸாதகர்களுக்கு ஸ்ரீகுருவின் அருள் நிச்சயம் வேண்டும் என்பது சாஸ்த்ரங்களின் முடிந்த முடிவு.  மந்த்ரத்திலும் உபாஸனையிலும் ஸித்தி ஏற்பட வேண்டுமானால் அதற்கு ஸ்ரீகுருவின் அருள் மிகவும் தேவை.  ஸ்ரீகுருவின் அருளால் தன் குருநாதராலேயே அருள்சக்தி என்று அழைக்கப்பட்ட எனது தகப்பனாரும் நமது குருநாதருமான பூஜ்யஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்கள் வாழ்க்கையில் பல பல ஆச்சர்யகரமான, அற்புதமான நிகழ்ச்சிகள் நடந்தன. நடந்தும் வருகின்றன. அவற்றில் சில எனக்கு நேரில் தெரிந்தவை. சில அம்மா சொன்னவை. சில நண்பர்கள், உறவினர்கள் மூலம் கேள்விப்பட்டது, அதனைத்தான் இதில் காணப்போகிறோம். மற்றும் நமது பரமகுருநாதர் அருள் அற்புதங்களும் இன்னும் சில மஹான்கள், ஸன்யாஸிகள் ஆகியவர்களின் அற்புத ங்களும் கூட இதில் பதிவு செய்துள்ளேன். பொருந்தினால் நான் தன்யனாவேன்.

                எனது தகப்பனார் சிறு வயது முதலே ஸித்தர்கள், மஹான்கள் இவர்களிடம் ஈடுபாடு உடையவர். எங்களின் கிராமமான நாகரசன் பேட்டையில் ஒரு ஸித்த புருஷர் - மஹான் ஸ்ரீகாரைஸித்தர் - என்பவர் வசித்து வந்தார்.  அவர் மஹா ஸித்திகள் கைவரப் பெற்றவர். அவரிடம் எனது தகப்பனார் நெருங்கி பழகி வந்தார். அதுபற்றியுள்ள பல நிகழ்ச்சிகளை பிறகு விவரிக்கிறேன். அந்த கிராமத்தில்தான் எனது தகப்பனார் தன் குருநாதரான குஹானந்தமண்டலி பூஜ்யஸ்ரீஅனந்தாநந்தநாதர் அவர்களை ஸந்திக்க நேர்ந்தது. அதன்பின்தான் இவர் ஸந்யாஸ வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருந்துவந்தவர் தன் குருநாதர் சொல்படி திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார். அவரது ஒரு சொல்லே- ஞான ஈடுபாட்டுடன் இருந்த தன்னை பூரணஞானவானாக, வாழையடி வாழையாக வந்து கொண்டிருக்கும் ஸ்ரீவித்யாஉபாஸனா மார்க்கத்தின் ஒரு சிறிய வாழைக்கன்றாக ஆக்கியது என்றால் மிகையில்லை என்று அடிக்கடி கூறக்கேட்டிருக்கிறேன். அதுமுதல் எனது தகப்பனார் தனது இல்வாழ்க்கையை எவ்வாறு நடத்தி வந்தார், வருகிறார் என்பதை இந்த இடத்தில் சற்று ஆதார பூர்வமாக விவரிக்க வேண்டியுள்ளது.

                ச்ருங்ககிரியில் பீடாதிபத்யம் நடத்திவந்தவரும், பலவேதாந்த க்ரந்தங்களை இயற்றியவருமான பூஜ்யஸ்ரீவித்யாரண்யஸ்வாமிகள் செய்ததான ஒரு க்ரந்தமுண்டு. அதனை பஞ்சதசீ என்ற பெயரில்  பெரியோர்கள் அறிவார்கள். அதிலே த்யானதீபம் என்ற அத்யாயத்தில் அவர் கூற்றாக சில ஸ்லோகங்களை இதில் பார்க்கப் போகிறோம்.
ஸதா காலமும் த்யானபரமாக, ஞானபரமாக ஒருவர் வாழ்கிறார் என்றால் அவரது உலக தொடர்பைப்பற்றி இங்கு ஸ்வாமிகள் விளக்குகிறார்.
புஞ்ஜானோ அபி நிஜாரப்தம் ஆஸ்தாதி சயதோ  அனிசம் !
த்யாதும் சக்தோ ந ஸந்தேஹோ விஷயவ்யஸனி யதா !!

                இதற்கு பொருள்- ஒரு ஞானி என்பவன்- தன்னுடைய ப்ராரப்தகர்மாவை அனுபவித்துக் கொண்டிருந்தபோதிலும், தனது உபாஸனை பிடிமானத்தின் பலத்தினால் எப்போதும் த்யானம் செய்து கொண்டிருக்க அவனால் முடியும். விஷய சுகங்களில் ஆஸக்தி யுள்ளவன் எப்படியிருப்பானோ அப்படியிருப்பான். இதில் கொஞ்சங்கூட ஸந்தேஹமில்லை. அதாவது விஷய சுகங்களில் ஈடுபட்டவர்கள் உண்பது, உறங்குவது, வேலை செய்வது முதலியற்றை எப்படி அனிச்சை செயலாக செய்கிறார்களோ அவ்விதமே ஆன்ம சுகத்தில் ஈடுபட்டவர்களுக்கு உலக விவகாரங்களும் அனிச்சை செயலாக இருப்ப தனால் அவர்களுக்கு அவ்விவகாரங்களினால் ஏற்படும் வினைத்தொடர்புகள் கிடையாது. அதனால் அவர்கள் ப்ரவ்ருத்தியில் ஈடுபடுவதனால் கெடுதல் ஒன்றும் ஏற்படாது.
ஏவம் த்யானைக நிஷ்டோ அபி லேசாது லௌகிகம் ஆசரேத் !
தத்வவித்தத்வவிரோதித்வாத் லௌகிகம் ஸம்யகாசரேத் !!

                இதற்கு பொருள்- த்யானத்திலே நிலைத்திருப்பவனும் உலகாயதமான கார்யத்தை ஸ்வல்பமாகவே செய்வான். தத்வமறிந்தவனோ - தத்வஞானத்திற்கு உலக கார்யம் - விரோதமில்லாததினால் உலககார்யத்தை நன்றாகவே செய்வான்.

                இவ்வாறெல்லாம் சாஸ்த்ர வாக்கியங்கள் இருப்பதால்தான் ஸ்ரீபரமகுருநாதர் இவரை இல்லறத்தில் ஈடுபடவைத்தது பொருத்தமாக உள்ளது என்பதை ஸ்ரீகுருஜியின் நடவடிக்கைளைக் கொண்டு நாம் அறிந்து கொள்கிறோம். அதனால் அவர்கள் வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்ததாக ஆனது. அதனைத்தான் இங்கு வரிசையாக விவரித்துள்ளேன். நிகழ்ச்சிகள் அத்தனையும் உண்மை. ஆனால் சில இடங்களில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடவில்லை.

                1. ஒரு நாள் கிராமத்தில் வாசலில் உட்கார்ந்து கிராம அதிகாரியின் வேலைகளில் இருந்தார் அப்பா. அப்போது ஒரு குடுகுடுப்பைகாரன் அங்கு வந்தான். எங்கள் வீட்டருகில் வந்தவன் திடீரென்று கத்திப்பேச ஆரம்பித்தான். எனக்கு நீங்கள் நிறைய ஆடை அணிகலன்கள் கொடுத்தால்தான் இவ்விடம் விட்டு நகருவேன் என்று ஆவேசத்துடன் பேசினான். பொறுமையாய் இருந்த அப்பாவை வேண்டுமென்றே வம்புக்கிழுத்தான்.  என்னிடம் என்ன உள்ளது தெரியுமா ?  இதோ பாருங்கள் என்று கூறி தன் பையில் இருந்து ஒரு கை எலும்புக்கூட்டை எடுத்துகாட்டி மிரட்டினான். அதற்கு அப்பாவும் அவனைப்பார்த்து அதை விட என்னிடம் அதிகமான சக்தி வாய்ந்த பொருள் உள்ளது.  நீ ஜடமான பொருளை கொண்டு மிரட்டுகிறாய். ஆனால் என்னிடம் உள்ள வஸ்த்துவோ சைதன்யமான வடிவம். அது உன்னை ஓடஓட விரட்டும்- என்று கூறவும், அதை என்னிடம் காட்டுங்கள் என்று அவன் கூறினான்.  அதற்கு அப்பா அதை உன்னால் பார்க்க முடியாது அஹங்காரம் உள்ள வர்களுக்கு அது தெரியாது. இப்போது பார்! -என்று கூறவும் அவன் பின்பு பயத்துடன் இவரது வீர முழக்கத்தால் சத்தமின்றி சென்று விட்டான். இந்நிகழ்;ச்சியானது ஒரு உபாஸகன் எவ்விதம் வீரத்துடன் தனது உபாஸக தெய்வத்தை திடமாக நம்பவேண்டும் என்று எடுத்துக்காட்டாக அமைந்ததுள்ளது.

              

அற்புதங்கள் தொடரும் .......


ஸ்ரீ குருவின் திருப்புகழ்பாடும்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த அந்தாதி
ஸ்ரீஅருட்சக்தி குருவின் பிறந்த நாளில் (01.11.2013) பணிவுடன் படைத்தவன் நாக சுந்தரம்


அன்று அக்கண்ணன் அவதரித்தான் அழித்தான் அவம் அகிலத்தில்
இன்று நீபிறந்து எங்கள் மனமாயை மாற்றினாய் முயன்றே
கன்றாய் காசினியை கருமத்தால் உழல்வோம் கருணையுடன் கண்ணால்
என்றும் எங்கள் குருவாய் வந்தே கொள்வாய் குணம்

குணத்தினில் குன்றுநீ மனத்தகத்து மாசகன்ற மேதைநீ எந்தனுக்கு
கணத்தினில் காட்சிதந்து கடைசியில் வீடு தரும் வித்துநீ
சினத்தினில் சீறிவந்து சங்கடங்கள் தீர்ப்பதில் சாரைநீ சாந்தமுடன்
மனத்தினில் மாசுநீக்கி மலர வைப்பாய் மண்ணிலே மக்களை

மக்களுடன் மாக்களாய் மண்ணிலே தினம்தினம் பிறக்கிறோம் மீளவந்து
அக்கறை அன்புடன் அழிக்கிறாய் அறியாமை ஆண்டவா பணிகிறோம்
சொக்கநாதன் ஆடுகின்ற ஊழியாட்டம் காண வைத்தாய் எங்களை
பக்கத்திலே வந்துமே பரகதியை தருவாய் பணிகிறோம் உன்னடி

உன்னடி பணிகிறோம் உண்மையை தொழுகிறோம் உன்னருள் உன்னுவாய்
தன்னையே காண வைத்த தகைமைசால் தெய்வமே தீர்த்திடு தீமையை
அன்னை அவளின் அன்புகொண்ட ஆதிகுரு நீயலோ அறிவமே
சொன்ன சொல்லை பேணுவோம் சொந்தம்நீ சுகமும்நீ சகத்தினில்

சகத்தினில் பிறந்து பிறந்து சீர்கெடவோ வந்திட்டோம் எண்ணுவீர்
அகத்தினில் பார்க்க பார்க்க ஆண்டவன் தெரிவனே உன்னுவீர்
தகதகக்கும் ஒளியுடன் தீபஒளி நாளிலே திருவாக வந்தவர்
சிவசிவக்கும் மேனிகொண்டு சொன்னாரே சேதியை நால்வருக்கு அன்று