அருளின் அற்புதங்கள்
எழுதியவர்-
வேதாந்தகவியோகி நாகசுந்தரம்
பாகம் : 2
சென்ற
சில ஆண்டுளுக்கு முன் கேள்விப்பட்ட ஒரு செய்தி இது.
தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் உள்ள ஸ்ரீஅப்பாவின் சிஷ்யை ஒருவள் சாமான்கள் வாங்கிக்கொண்டு தன் பெண்ணுடன் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து
கொண்டிருந்தாள். அந்நேரம் அவளது ஸகோதரர் ஒருவரிடமிருந்து (அவரும் இவரின் சீடர்) மொபையில் போன் கால்
அழைத்தது. சாதாரணமாக ஸெளக்கியம் விசாரித்து விட்டு போன் நின்று விட்டது. உடனே
இவளுக்கு மறுநாள் தீபாவளி யாயிற்றே! நமது குருநாதருக்கு பிறந்த நாள் அல்லவா! இதனை
தன் ஸகோதரனுக்கு நினைவு படுத்தியிருக்கலாமே என எண்ணினாள். இந்த எண்ணம் தோன்றி
மறைந்த அடுத்த விநாடியே ஆட்டோ எதிரில் மரத்தில் மோதி ஒரு பக்கமாக சாய்ந்து
விழுந்துவிட்டது. இவளும் இவளின் பெண்ணும் கீழே உருண்டார்கள். ஆனால் அதியசம்
பாருங்கள். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆட்டோ டிரைவருக்கு மட்டும்
சிறிய காயம். உடன் அவளுக்கு தன் குருநாதர் நினைவுதான் வந்தது. ஏன் தெரியுமா? அவரின் நினைவை மனதில் கொண்டிருந்த நேரத்தில்தானே இந்த விபத்து நேர்ந்தது.
அதனால் ஸ்ரீகுருவின் நினைவே எந்த ஆபத்தையும் நீக்கும் என்பதை நிதரிசனமாக உணர்ந்தாளாம்.
தொடரும் அற்புதங்கள் ..........
No comments:
Post a Comment